சமூக வலைத்தளத்தின் ஊடாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த சந்தேகநபர் மே மாதம் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் மலேசியாவிலிருந்து இலங்கை வந்தவுடன் நேற்று இரகசியப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.
பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரை கைது செய்து சிறைப்பிடித்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து இவர் சமூக வலைத்தளங்களில் ஜனாதிபதிக்கு மரண அச்சுறுத்தல் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
முக்கிய குறிப்பு: எமது இணையதளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் ஆக்கங்கள், செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு அரங்கம் நியுஸ் நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனை கருத்தில் கொண்டு எம்முடன் தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். உண்மை!! நேர்மை!! நடுநிலைத்தன்மை எமது குறிக்கோள் -நிருவாகம்-அரங்கம் நியுஸ் இலங்கை நீங்களும் காணும் செய்திகளை உடன் அனுப்பி வையுங்கள் Arankamnews@gmail.com உங்கள் கருத்துக்களை கீழே உள்ள கருத்துப்பெட்டியில் இடவும்